நாட்டில் நேற்றைய தினம் (21) 31 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளது.இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 14,158 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் மேலும் 735 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.இதனடிப்படையில் நாட்டில் மொத்தமாக 557,361 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.