சவூதி அரேபியாவுக்கான இலங்கையின் புதிய தூதுவர் பி.எம் அம்சா நற்சான்றிதழ்களை கையளித்தார்!

Date:

சவூதி அரேபியாவுக்கான இலங்கையின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள பி.எம் அம்சா தனது நற்சான்றிதழ்களின் பிரதியை உபசரணை விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் காலித் பின் பைஷல் அல் சிஹ்லியிடம் நவம்பர் 2 ஆம் திகதி சவூதி அரேபியாவின் வெளிநாட்டு அமைச்சில் வைத்து கையளித்தார்.

நிமயனம் செய்யப்பட்ட தூதுவரின் புதிய நியமனத்தை அன்புடன் வரவேற்று வாழ்த்தி உரையாற்றிய பிரதி அமைச்சர் காலித் பின் பைசல் அல் சிஹ்லி, தூதுவர் அம்சாவின் பதவிக்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் செழிப்படையும் என சவூதி அரேபியா நம்புவதாகத் தெரிவித்தார்.

தன்னை வரவேற்பதற்காக ஏற்பாடு செய்தமைக்காக சவூதி அரேபிய அரசாங்கத்திற்கு தூதுவர் அம்சா நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். அரசியல் மற்றும் பொருளாதாரத் துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக தான் உழைக்கப் போவதாகவும்,சவூதி அரேபியாவில் வாழும் இலங்கையின் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலனுக்காகவும் அவர் முன்னுரிமை அளிப்பதாகத் தெரிவித்தார்.

நற்சான்றிதழ்களைக் கையளிக்கும் போது பிரதியமைச்சருடன் கலந்துரையாடல்கள் சுமுகமான வகையில் இடம்பெற்றது. சான்சரியின் தலைவர் துல்மித் வருணவும் தூதுவருடன் இணைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

இலங்கை தூதரகம்,ரியாத் 

05.11.2021

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...