கொவிட் சிவப்பு பட்டியலிலிருந்து எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் இலங்கை உட்பட சில நாடுகளை பஹ்ரைன் நீக்கியுள்ளதாக அந் நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.கடந்த காலங்களில் கொவிட் அச்சுறுத்தல் காரணமாக இலங்கை உள்ளிட்ட 16 நாடுகளை பஹ்ரைன் சிவப்பு பட்டியலில் உள்ளடக்கியிருந்தது.
இந் நிலையில் எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் இலங்கை உள்ளிட்ட சில நாடுகளை சிவப்பு பட்டியலிலிருந்து நீக்க தீர்மானித்துள்ளது.எனினும் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நேபாள் ஆகிய நாடுகளிலுள்ள வர்கள் பஹ்ரைனில் தொழில் வாய்ப்புக்களுக்கான அனுமதியை பெற முடியாதென அறிவிக்கப்பட்டுள்ளது.