சீஷெல்ஸ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி இன்று

Date:

சர்வதேச கால்பந்தாட்டப் போட்டியொன்றில் இலங்கை கால்பந்து அணி இறுதிப் போட்டிக்கு வந்து 15 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. இலங்கை கால்பந்து அணி கடைசியாக 2006ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியிலேயே இத்தகைய திறமையை வெளிப்படுத்தியது.

சர்வதேச தரவரிசையில் இலங்கை கால்பந்தாட்ட அணி 204வது இடத்திலும், சீஷெல்ஸ் அணி 199வது இடத்திலும் உள்ளது.இன்றைய போட்டியில் இலங்கை கால்பந்தாட்ட அணி வெற்றி பெற்றால், 25 வருடங்களின் பின்னர் சர்வதேசப் போட்டியொன்றை வெல்வது இதுவே முதல் தடவையாகும். இலங்கை கால்பந்து அணி கடைசியாக 1995 ஆம் ஆண்டு சர்வதேச கால்பந்து போட்டியில் வெற்றி பெற்றது.அந்த ஆண்டு இலங்கை நடத்திய தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் இலங்கை வென்ற கடைசி சர்வதேச கால்பந்து சாம்பியன்ஷிப் ஆகும்.

இன்றைய இறுதிப் போட்டியில் பிரதம அதிதிகளாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் கியானி இன்பான்டினோ ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழைக்கான சாத்தியம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது...

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...

புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று...