நாடு முழுவதும் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்களில் காலை மற்றும் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாகவும், மேல், சப்ரகமுவ , வடமேல் ,மத்திய மாகாணங்களில் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் பலத்த காற்றும் வீசக் கூடும் . மின்னல் தாக்கங்களினால் ஏற்படக் கூடிய பாதிப்புகளிலிருந்து பொது மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.