பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் வெடிப்புச் சம்பவம்!

Date:

பன்னிப்பிட்டிய – கொட்டாவ பிரதேசத்தில் வீடொன்றில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இன்று (25) அதிகாலை இடம்பெற்றுள்ளது.எரிவாயு சிலிண்டர் காரணமாக இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

வெடிப்பு சம்பவத்தில் குறித்த வீடு பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.எனினும் இந்த சம்பவத்தில் வீட்டில் உள்ளவர்களில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த மாதத்தில் மாத்திரம் நாட்டில் பல்வேறு இடங்களில் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 4 ஆம் திகதி வெலிகம கப்பரதொட்ட பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் மூவர் காயமடைந்தனர் . நவம்பர் 16 ஆம் திகதி இரத்தினபுரியில் உள்ள உணவகம் ஒன்றில் வெடிப்பு சம்பவம் இடம்பெற்றதாகவும் , விசாரணைகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்தமையே சம்பவத்திற்கு காரணம் எனத் தெரிய வந்தது, நவம்பர் 20 ஆம் திகதி கொழும்பிலுள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் உள்ள உணவகத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 3 பேர் சிறு காயங்களுக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...