புத்தளம் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு!

Date:

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் இதுவரையில் 22,217 குடும்பங்களைச் சேர்ந்த 78614 பேர் பாதிக்கப்பட்டு, 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், 2 பேர் காணாமல் போயுள்ளதாக புத்தளம் மாவட்ட செயலாளர் கே.ஜி விஜேசிறி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாதிக்கப்பட்ட குடும்பங்கள் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ள அதேநேரம் தற்காலிக முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.21 தற்காலிக முகாம்களில் 1637 குடும்பங்களைச் சேர்ந்த 5234 பேர் இடமாற்றப்பட்டுள்ளனர்.பாதிக்கப்பட்ட மக்களுக்கான அத்தியாவசிய தேவைகளை பிரதேச செயலகங்களூடாக ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை , குறித்த வெள்ள அனர்த்தத்தினால் புத்தளம் மாவட்டத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காணமல் போயுள்ளனர்.காணாமல் போன இருவரையும் மீட்பதற்கான தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்க வருகின்றன.கடந்த திங்கட்கிழமை பெய்த அடை மழையினால் ஏற்பட்ட பாரிய வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட போக்குவரத்து வீதிகளை புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் வேண்டுகோளுக்கிணங்க முப்படையினர் களத்தில் இறங்கி வாகன நெரிசலை நேற்று (09) காலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதேவேளை தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக தப்போவ, தெதுரு ஓயா,ராஜாங்கனை மற்றும் அங்கமுவ ஆகிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

 

Popular

More like this
Related

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாகின்றன!

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாவதாக தேசிய...

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...