மூன்றாவது நாளாகவும் தொடரும் மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் தொழிற்சங்க போராட்டம்!

Date:

கெரவலப்பிட்டி யுகதனவி மின்னுற்பத்தி நிலையத்தின் 40 % பங்குகள் அமெரிக்கா நிறுவனத்துக்கு வழங்கப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் முன்னெடுத்துள்ள ‘ சட்டப்படி வேலை செய்யும்” தொழிற்சங்க நடவடிக்கை மூன்றாவது நாளாகவும் (27) தொடர்ந்து வருகிறது.

தொழிற்சங்க நடவடிக்கை கடுமையாக்கப்பட்டு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக குறித்த சங்கத்தின் தலைவர் செளமய குமாரவடு தெரிவித்துள்ளார்.இதன் காரணமாக எதிர்வரும் நாட்களில் ஏற்படும் மின்சார துண்டிப்புக்களை வழமைக்கு கொண்டு வர முடியாத நிலை உருவாகுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

மின்னிலைய ஒப்பந்தத்துக்கு எதிரான மனுவை எதிர்வரும் 29 ஆம் திகதி பிரதம நீதியரசர் தலைமையிலான 5 வர் அடங்கிய குழு முன்னிலையில் விசாரிக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.குறித்த மனு நேற்றைய தினம் (26) மூவரடங்கிய குழு முன்னிலையில் அழைக்கப்பட்ட போது குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த மனு எதிர்வரும் திங்கட்கிழமை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய , நீதியரசர்களான புவனேக அலுவிஹாரே , பிரியன்த ஜயவர்தன , விஜித் மலல்கொட மற்றும் எல்.ரி.பி தெஹிதெனிய ஆகியோர் கொண்ட குழு முன்னிலையில் ஆரயப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

டிரம்ப்புக்கு நோபல் பரிசு மறுக்கப்பட்டதற்கு வெள்ளை மாளிகை கடும் எதிர்ப்பு!

தென் அமெரிக்காவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ள வெனிசுவேலாவில் மக்களின் ஜனநாயக உரிமைகளை...

நாட்டின் பல பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

இன்றையதினம் (11) நாட்டின் கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை, அம்பாந்தோட்டை...

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...