மூன்றாவது நாளாகவும் தொடரும் மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் தொழிற்சங்க போராட்டம்!

Date:

கெரவலப்பிட்டி யுகதனவி மின்னுற்பத்தி நிலையத்தின் 40 % பங்குகள் அமெரிக்கா நிறுவனத்துக்கு வழங்கப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் முன்னெடுத்துள்ள ‘ சட்டப்படி வேலை செய்யும்” தொழிற்சங்க நடவடிக்கை மூன்றாவது நாளாகவும் (27) தொடர்ந்து வருகிறது.

தொழிற்சங்க நடவடிக்கை கடுமையாக்கப்பட்டு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக குறித்த சங்கத்தின் தலைவர் செளமய குமாரவடு தெரிவித்துள்ளார்.இதன் காரணமாக எதிர்வரும் நாட்களில் ஏற்படும் மின்சார துண்டிப்புக்களை வழமைக்கு கொண்டு வர முடியாத நிலை உருவாகுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

மின்னிலைய ஒப்பந்தத்துக்கு எதிரான மனுவை எதிர்வரும் 29 ஆம் திகதி பிரதம நீதியரசர் தலைமையிலான 5 வர் அடங்கிய குழு முன்னிலையில் விசாரிக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.குறித்த மனு நேற்றைய தினம் (26) மூவரடங்கிய குழு முன்னிலையில் அழைக்கப்பட்ட போது குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த மனு எதிர்வரும் திங்கட்கிழமை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய , நீதியரசர்களான புவனேக அலுவிஹாரே , பிரியன்த ஜயவர்தன , விஜித் மலல்கொட மற்றும் எல்.ரி.பி தெஹிதெனிய ஆகியோர் கொண்ட குழு முன்னிலையில் ஆரயப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...