வசீம் ராஸிக்கின் அசத்தலான கோல்களினால் இலங்கை அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது

Date:

சுகாதார விதிமுறைகளுக்கு உட்பட்ட வகையில் கொழும்பில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நேற்று (16) இடம்பெற்ற (எஃப்எஸ்எல்) நடத்திய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கோப்பை கால் பந்தாட்ட போட்டியில் இலங்கை 2-1 என்ற கோல் கணக்கில் பங்களாதேஷை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது .

சில நாட்களுக்கு முன்னர் மாலைத்தீவுக்கு எதிராக இலங்கை சார்பில் இரண்டாவது பாதியில் அசத்தலான நான்கு கோல்களை அடித்த அஹமட் வசீம் ரஸீக், பங்களாதேஷுக்கு எதிரான இரண்டு கோல்களையும் அடித்ததன் மூலம் மீண்டும் நட்சத்திரமாக பிரகாசிக்கிறார்.

19ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இலங்கை அணி, சீஷெல்ஸ் அணியுடன் மோத உள்ளதுடன் பிரதமர் ‘மஹிந்த ராஜபக்ச கிண்ணம் மற்றும் 30,000 அமெரிக்க டொலர்களை இலங்கை அணி தனதாக்கிக் கொள்ளுமா என்பது அனைத்து இரசிகர்களினதும் எதிர்பார்ப்பாகும்.

https://www.facebook.com/106280117868758/posts/406352384528195/

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு

களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப்...

பாடசாலை மாணவர்களுக்கான காலணி வவுச்சர்களின் செல்லுபடி காலம் நீடிப்பு!

2026 ஆம் ஆண்டிற்காகத் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி...

பொடி லெசியை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி!

இந்தியாவில் கைது செய்யப்பட்டு இன்று (27) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட...

மார்ச் 01 முதல் போதைப்பொருள் ஒழிப்பு வாரம்!

2026 மார்ச் 01 ஆம் திகதி ஆரம்பமாகும் வாரத்தை “போதைப்பொருள் ஒழிப்பு...