2020 ஆம் ஆண்டின் வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பு நாளை ( 22) மாலை 5 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
கடந்த 12 ஆம் திகதி நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் 2022 ஆம் ஆண்டுக்கான திட்டத்தை சமர்ப்பித்திருந்தார்.இதற்கமைய வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் 13 ஆம் திகதி ஆரம்பமான பாராளுமன்றத்தில் 7 நாட்களுக்கு நடைபெறும் விவாதம் நாளை ( 22 ) ஆம் திகதி மாலையுடன் நிறைவடைகிறது.
இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பையடுத்து நாளை மறுதினம் (23) முதல் குழு நிலையிலான விவாதம் ஆரம்பமாகவிருப்பதுடன் சனிக்கிழமை உள்ளடங்கலாக டிசம்பர் 10 ஆம் திகதி வரை 16 நாட்கள் விவாதம் இடம்பெறும்.
வரவு செலவுத் திட்ட மூன்றாவது வாசிப்பு மீதான வாக்களிப்பு டிசம்பர் 10 ஆம் திகதி பிற்பகல் 5 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.