வெலிசர விபத்தில் காயமடைந்த மேலுமொருவர் உயிரிழப்பு!

Date:

கடந்த 4 ஆம் திகதி வெலிசர , மஹாபாகே மயானத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில்  சிகிச்சை பெற்று வந்த இளைஞன் உயிரிழந்துள்ளான்.17 வயதுடைய இரத்தினபுரியைச் சேர்ந்த இம்முறை உயர்தர பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞனின் உறவினர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.16 வயதுடைய சிறுவன் ஒருவனாலே இந்த விபத்து இடம்பெற்றது.விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட 16 வயதுடைய இளைஞன் மற்றும் தந்தை ஆகியோர் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...