வெலிசர விபத்தில் காயமடைந்த மேலுமொருவர் உயிரிழப்பு!

Date:

கடந்த 4 ஆம் திகதி வெலிசர , மஹாபாகே மயானத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில்  சிகிச்சை பெற்று வந்த இளைஞன் உயிரிழந்துள்ளான்.17 வயதுடைய இரத்தினபுரியைச் சேர்ந்த இம்முறை உயர்தர பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞனின் உறவினர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.16 வயதுடைய சிறுவன் ஒருவனாலே இந்த விபத்து இடம்பெற்றது.விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட 16 வயதுடைய இளைஞன் மற்றும் தந்தை ஆகியோர் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...