T20 Final Highlights: ஐசிசி உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா செம்பியனானது!

Date:

ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் இறுதிப் போட்டி இன்று (14) டுபாயில் இடம்பெற்றது.இறுதிப் போட்டியில் நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதின.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 172 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

நியூசிலாந்து அணியின் துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் வில்லியம்சன் 48 பந்துகளில் 85 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.அவுஸ்திரேலியா அணியின் பந்துவீச்சில் அதிகபட்சமாக கெஸல்வூட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

173 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய அவுஸ்திரேலியா அணி 18.5 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அவுஸ்திரேலியா அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 77 மற்றும் வோர்னர் 53 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் போல்ட் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்த வெற்றியுடன் அவுஸ்திரேலியா அணி முதலாவது இருபதுக்கு இருபது தொடர் செம்யியன் என்ற பெயரை பெற்றுக் கொண்டனர்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...