T20 Highlights: வெற்றியுடன் தொடரிலிருந்து வெளியேறியது தென்னாப்பிரிக்கா!

Date:

ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் “சூப்பர் 12” இன் 39 வது போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.இப் போட்டி ஷார்ஜாவில் இடம்பெற்றது.நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 189 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

தென்னாப்பிரிக்கா அணியின் துடுப்பாட்டத்தில் டஸ்ஸன் 94 , மர்க்ரம் 52 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் முயின் அலி மற்றும் ஆதில் ரசீத் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

190 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 179 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.

இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டத்தில் முயின் அலி 37 , டேவிட் மார்லன் 33 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.தென்னாப்பிரிக்கா அணியின் பந்து வீச்சில் ரபாடா 3 , தப்ரிஸ் ஷம்ஸி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.

தென்னாப்பிரிக்கா அணி போட்டியில் வெற்றி பெற்றாலும் கூட அரையிறுதி வாய்ப்பை முற்றாக இழந்து தொடரிலிருந்து வெளியேறுகின்றது.இதனடிப்படையில் குழு 1 இல் இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...

நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ள இஷாரா உட்பட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் முக்கிய...

‘மாற்றத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை மாற்றுங்கள்’: புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பிலான முக்கிய கருத்தரங்கு!

''மாற்றத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை மாற்றுங்கள்'' என்ற தலைப்பிலான கருத்தரங்கு எதிர்வரும்...