T20 Highlights: ஆப்கானை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது நியூசிலாந்து!

Date:

ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் “சூப்பர் 12” இன் 40 வது போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.இன்றைய போட்டி ஷெய்க் ஸெய்ட் அபுதாபி மைதானத்தில் இடம்பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.இதன்படி ஆப்கான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 124 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

ஆப்கானிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தில் நஜிபுல்லாஹ் 73 , குல்பதின் 15 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் போல்ட் 3 , ஸொவ்தி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.

125 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி 18.1 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 125 ஓட்டங்களை பெற்று வெற்றி அடைந்தது.நியூசிலாந்து அணியின் துடுப்பாட்டத்தில் கேன் வில்லியம்சன் 40, டேவோன் கொன்வே 36 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில் ரசீத் கான் மற்றும் முஜிபுர் ரஹ்மான் தலா 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.

இப் போட்டியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து நியூசிலாந்து அணி குழு 2 இல் இரண்டாவது அரையிறுதிக்கு செல்லும் அணியாக தகுதி பெற்றுள்ளது.ஆப்கானின் தோல்வியோடு இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பும் கனவாகியது.

 

 

 

Popular

More like this
Related

‘அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய முஸ்லிம் லகுண’: வரலாற்று நூல் வெளியீட்டு விழா கண்டியில்!

இலங்கை முஸ்லிம்கள் இந்த நாட்டிற்கு ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க பல்வேறு சேவைகள்...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மற்றும் ரஷ்ய தூதுவர் இடையில் முக்கிய சந்திப்பு

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) டாக்டர் நய்யார் நசீர்,...

தேர்தலுக்குத் தயாராகும் தமிழகம்: இன்றுடன் பிரசாரங்கள் நிறைவு

ஏப்ரல் 23ம் திகதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில்,...

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரு குழுக்களுக்கு...