T20 Highlights: ஐந்து அதிரடி வெற்றியுடன் “சூப்பர் 12” சுற்றை நிறைவு செய்தது பாகிஸ்தான்!

Date:

ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் “சூப்பர் 12” இன் 41 வது போட்டியாக பாகிஸ்தான் மற்றும் ஸ்கொட்லாந்து அணிகள் இன்று (07) மோதின.இன்றைய போட்டி சார்ஜாவில் இடம்பெற்றது.நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 189 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் பாபர் அசாம் 66(47), முஹம்மத் ஹபீஸ் 31(19), கடைசி நேரத்தில் 18 பந்துகளில் 54 ஓட்டங்களை அதிரடியாக அனுபவ வீரர் சுகைப் மலிக் பெற்றுக் கொடுத்தார்.

ஸ்கொட்லாந்து அணியின் பந்துவீச்சில் ஹம்ஸா தாஹிர் மற்றும் ஸப்யான் சரீப் தலா 1 விக்கெட்டுகளையும், கிரிஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.190 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ஸ்கொட்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 117 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.

ஸ்கொட்லாந்து அணியின் துடுப்பாட்டத்தில் ரிச்சர்ட் பெரிங்டன் 54(37), ஜோர்ஜ் முன்ஸே 17(31) ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பாகிஸ்தான்அணியின் பந்து வீச்சில் சதாப் கான் 2 (14) , சஹீன் அப்ரிடி , ஹரீஸ் ரொவ்ப் , ஹசன் அலி தலா 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.போட்டியின் ஆட்ட நாயகனாக அதிரடியாக ஆடிய சுகைப் மலிக் தெரிவானார்.

இன்றைய வெற்றியுடன் சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தான் அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.அதாவது,

முதலாவது போட்டியில் இந்தியாவுக்கு எதிராக 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி.

இரண்டாவது போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி.

மூன்றாவது போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி.

நான்காவது போட்டியில் நமீபியாக்கு எதிராக 45 ஓட்டங்களால் வெற்றி.

ஐந்தாவது போட்டியில் ஸ்கொட்லாந்து அணிக்கு எதிராக 72 ஓட்டங்களால் வெற்றி.

பாகிஸ்தான் அணி எதிர்வரும் 11 ஆம் திகதி அரையிறுதியில் அவுஸ்திரேலியா அணியை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...