T20 Highlights: 45 ஓட்டங்களால் நமீபியாவை வீழ்த்தியது பாகிஸ்தான்; அரையிறுதிக்கு தகுதி!

Date:

ஐ.சி.சி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் ‘சூப்பர் 12″ இன் 31 வது போட்டியாக பாகிஸ்தான் மற்றும் நமீபியா அணிகள் மோதின.இன்றைய போட்டி ஷெய்க் ஸெய்ட் அபுதாபி மைதானத்தில் இடம்பெற்றது.இப் போோ்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 189 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தில் அணியின் தலைவர் பாபர் அசாம் 70(49), ஆட்டமிழக்காமல் விக்கெட் காப்பாளர் முஹம்மத் ரிஸ்வான் 79 (50) , முஹம்மத் ஹபீஸ் 32(16) ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தனர்.

நமீபியா அணியின் பந்துவீச்சில் ஜன் மற்றும் பிரய்லின்க் தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.

190 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய நமீபியா அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 144 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.

நமீபியா அணியின் துடுப்பாட்டத்தில் டேவிட் வய்ஸஸ் 43 ,கிரெய்க் வில்லியம்ஸ் 40 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் இமாத் வஸீம் , ஹசன் அலி, ஹரீஸ் ரொவ்ப், சதாப் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

போட்டியின் ஆட்டநாயகனாக பாகிஸ்தான் அணியின் விக்கெட் காப்பாளர் முஹம்மத் ரிஸ்வான் தெரிவானார்.

இந்த வெற்றியுடன் பாகிஸ்தான் அணி இத் தொடரின் நான்காவது வெற்றியை நிலை நாட்டியுள்ளதோடு அதிக ரன்ரேட்டில் குழு 2 இல் முதலாவது அரையிறுதிக்கு செல்லும் அணியாக தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...