T20 Highlights: 45 ஓட்டங்களால் நமீபியாவை வீழ்த்தியது பாகிஸ்தான்; அரையிறுதிக்கு தகுதி!

Date:

ஐ.சி.சி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் ‘சூப்பர் 12″ இன் 31 வது போட்டியாக பாகிஸ்தான் மற்றும் நமீபியா அணிகள் மோதின.இன்றைய போட்டி ஷெய்க் ஸெய்ட் அபுதாபி மைதானத்தில் இடம்பெற்றது.இப் போோ்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 189 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தில் அணியின் தலைவர் பாபர் அசாம் 70(49), ஆட்டமிழக்காமல் விக்கெட் காப்பாளர் முஹம்மத் ரிஸ்வான் 79 (50) , முஹம்மத் ஹபீஸ் 32(16) ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தனர்.

நமீபியா அணியின் பந்துவீச்சில் ஜன் மற்றும் பிரய்லின்க் தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.

190 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய நமீபியா அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 144 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.

நமீபியா அணியின் துடுப்பாட்டத்தில் டேவிட் வய்ஸஸ் 43 ,கிரெய்க் வில்லியம்ஸ் 40 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் இமாத் வஸீம் , ஹசன் அலி, ஹரீஸ் ரொவ்ப், சதாப் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

போட்டியின் ஆட்டநாயகனாக பாகிஸ்தான் அணியின் விக்கெட் காப்பாளர் முஹம்மத் ரிஸ்வான் தெரிவானார்.

இந்த வெற்றியுடன் பாகிஸ்தான் அணி இத் தொடரின் நான்காவது வெற்றியை நிலை நாட்டியுள்ளதோடு அதிக ரன்ரேட்டில் குழு 2 இல் முதலாவது அரையிறுதிக்கு செல்லும் அணியாக தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...