T20 Highlights: பங்களாதேஷுடனான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி!

Date:

ஐ.சி.சி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் “சூப்பர் 12” இன் 30 வது போட்டியாக பங்களாதேஷ் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின.இன்றைய போட்டி ஷெய்க் ஸெய்ட் அபுதாபி மைதானத்தில் இடம்பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 18.2 ஓவர்கள் முடிவில் 84 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டத்தில் நயீம் 9, லிடன்தாஸ் 24, சமீம் குசைன் 11 ,மஹ்தி ஹசன் 27 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.ஏனைய வீரர்கள் பெரிதளவில் பிரகாசிக்க தவறிவிட்டார்கள்.

தென்னாப்பிரிக்கா அணியின் பந்து வீச்சில் ரபாடா மற்றும் நோர்டிஜ் தலா 3 விக்கெட்டுகளையும் சம்ஸி 2 , பிரிடோரியஸ் 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.85 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 13.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

தென்னாப்பிரிக்கா அணியின் துடுப்பாட்டத்தில் பவுமா 31, ரஸ்ஸி வன் டர் 22 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பங்களாதேஷ்அணியின் பந்துவீச்சில் டஸ்கின் அஹ்மத் 2 , மஹ்தி ஹசன் 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.

 

 

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...