T20 Semi Updates:பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது அவுஸ்திரேலியா!

Date:

ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் நேற்று டுபாய் மைதானத்தில் இடம்பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்திருந்தது.முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 176 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தில் முஹம்மத் ரிஸ்வான் 67, பாபர் அசாம் 39ஓட்டங்களையும் கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடி 55 ஓட்டங்களை பக்ஹர் சமான் பெற்றுக் கொடுத்தார்.

அவுஸ்திரேலியா அணியின் பந்துவீச்சில் கம்மின்ஸ் மற்றும் ஸம்பா தலா 1 விக்கெட்டுகளையும் மிச்சல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.

177 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய அவுஸ்திரேலியா அணி 19 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அவுஸ்திரேலியா அணியின் துடுப்பாட்டத்தில் கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடி மெதிவ் வேர்ட் 17 பந்துகளில் 41 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.டேவிட் வோர்னர் 49 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சில் சதாப் கான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

நாளை மறுதினம் இறுதி ஆட்டத்தில் (14) அவுஸ்திரேலியா அணி நியூசிலாந்தை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...