ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் தற்போது டுபாய் மைதானத்தில் இடம்பெற்று வருகிறது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 176 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தில் முஹம்மத் ரிஸ்வான் 67, பாபர் அசாம் 39ஓட்டங்களையும் கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடி 55 ஓட்டங்களை பக்ஹர் சமான் பெற்றுக் கொடுத்தார்.
அவுஸ்திரேலியா அணியின் பந்துவீச்சில் கம்மின்ஸ் மற்றும் ஸம்பா தலா 1 விக்கெட்டுகளையும் மிச்சல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.அவுஸ்திரேலியா அணிக்கு 177 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியா அணி தற்போது 1 ஓட்டத்துக்கு 1 விக்கெட்டை இழந்துள்ளது.