ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் “சூப்பர் 12” இன் 38 மற்றும் 39 வது போட்டிகள் இன்று (06) இடம்பெறவுள்ளது.
இன்றைய நாளுக்கான முதலாவது போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் மோதவுள்ளது.இந்த போட்டி ஷெய்க் ஸெய்ட் அபுதாபி மைதானத்தில் இலங்கை , இந்திய நேரப்படி பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகும்.
இன்றைய நாளுக்கான இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதவுள்ளது.இந்த போட்டி ஷார்ஜாஹ் மைதானத்தில் இலங்கை,இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு ஆரம்பமாகும்.
இன்றைய இரு போட்டிகளும் குழு 1 ற்கானது.இன்றைய போட்டி அவுஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு மிக முக்கியமாகும்.இதில் வெற்றி பெறும் அணி குழு 1 இல் இரண்டாவது அரையிறுதிக்கு முன்னேறும் அணியாக தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.