இங்கிலாந்தில் வீசிய கடும் புயல்; மின்சாரம் இல்லாமல் மக்கள் தவிப்பு!

Date:

இங்கிலாந்தில் வீசிய கடும் புயல் காரணமாக மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வடக்கு அயர்லாந்தில் “அர்வன்” என பெயரிடப்பட்ட புயல் நேற்று (27) கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 100 மைல் வேகத்தில் காற்றும் பனிப்புயலும் சேர்ந்து தாக்கியதால் ஏராளமான மரங்கள் விழுந்துள்ளது, பெரிய லாரி ஒன்றும் விழுந்துள்ளது.

புயல் காரணமாக கடல் கடும் கொந்தளிப்புடன் காணப்பட்டது. மரம் விழுந்ததிலும், பனியில் சிக்கியும் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மின்சாரம் தடைபட்டதால் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் இருளில் தவிக்கின்றனர். சாலைகளில் விழுந்த கிடைக்கும் மரங்களை காவல்துறையினர் அகற்றி வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://amp.theguardian.com/uk-news/2021/nov/27/storm-arwen-two-people-killed-after-winds-of-almost-100mph-hit-uk&ved=2ahUKEwjG54yV-7n0AhXUTWwGHV-nDO8QFnoECAQQAQ&usg=AOvVaw3iaSydTC__WtmATwNVab4O&ampcf=1

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...