இன்று (28) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் 450 g பாணின் விலையை 10/= வால் அதிகரிப்பதற்கு பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் அறிவித்துள்ளது.
அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் நேற்று (27) இரவு கோதுமை மாவின் விலை அதிகரிப்பினால் பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்திருந்தனர்.இதேவேளை கோதுமை மாவின் விலை அதிகரித்ததுடன் நாடளாவிய ரீதியில் கோதுமை மாவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.