எட்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

Date:

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக எட்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

கண்டி, நுவரெலியா, மாத்தளை, பதுளை, இரத்தினபுரி, களுத்துறை, காலி மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

மலையக பகுதிகளில் மண்சரிவு, மண்மேடுகள் சரிந்து விழுதல் போன்ற அனர்த்தங்கள் இடம்பெறுவதற்கான அறிகுறிகள் இருந்தால் உரிய பகுதியை விட்டு பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.பொலிசாரும், முப்படையினரும் , மாவட்ட பிரதேச செயலகங்களும் அனர்த்த முகாமைத்துவத்திற்கு உதவுவதற்கு தயாராக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...