ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தலினால் எல்லையை முழுவதுமாக மூடுவதாக இஸ்ரேல் அரசு அறிவிப்பு!

Date:

ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தங்கள் நாட்டின் எல்லையை இரண்டு வாரங்களுக்கு முழுவதுமாக மூடுவதாக இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகமான அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன் தென்னாப்பிரிக்காவில் குறித்த புதிய வகை வைரஸ் உருமாற்றம் பெற்ற கண்டறியப்பட்ட நிலையில், 7 ஆப்பிரிக்க நாடுகளுடனான விமான சேவைகளுக்கு நவம்பர் 26ஆம் திகதியிலிருந்து இஸ்ரேல் தடை விதித்தது.

இந் நிலையில் அந் நாட்டில் ஒருவருக்கு புதிய வகை ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்ட நிலையில்,7 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனையடுத்து வெளிநாட்டினர் இஸ்ரேலுக்குள் நுழைய இன்று (28) நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படுவதாகவும், தொற்று பாதித்தோரின் தொடர்புகளை கண்டறியும் வகையில் பயங்கரவாத எதிர்ப்பு தொலைபேசி கண்காணிப்பு தொழில்நுட்பத்தை மீண்டும் அறிமுகப்படுத்துவதாகவும் பிரதமர் நஃப்தலி பென்னெட் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.aljazeera.com/amp/news/2021/11/28/israel-to-ban-entry-of-all-foreigners-over-omicron&ved=2ahUKEwjkxaez-br0AhWDT2wGHWdQAYIQFnoECAUQAQ&usg=AOvVaw1CM-g_QBsHSIVJEFTpsypO&ampcf=1

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...