ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தலினால் எல்லையை முழுவதுமாக மூடுவதாக இஸ்ரேல் அரசு அறிவிப்பு!

Date:

ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தங்கள் நாட்டின் எல்லையை இரண்டு வாரங்களுக்கு முழுவதுமாக மூடுவதாக இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகமான அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன் தென்னாப்பிரிக்காவில் குறித்த புதிய வகை வைரஸ் உருமாற்றம் பெற்ற கண்டறியப்பட்ட நிலையில், 7 ஆப்பிரிக்க நாடுகளுடனான விமான சேவைகளுக்கு நவம்பர் 26ஆம் திகதியிலிருந்து இஸ்ரேல் தடை விதித்தது.

இந் நிலையில் அந் நாட்டில் ஒருவருக்கு புதிய வகை ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்ட நிலையில்,7 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனையடுத்து வெளிநாட்டினர் இஸ்ரேலுக்குள் நுழைய இன்று (28) நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படுவதாகவும், தொற்று பாதித்தோரின் தொடர்புகளை கண்டறியும் வகையில் பயங்கரவாத எதிர்ப்பு தொலைபேசி கண்காணிப்பு தொழில்நுட்பத்தை மீண்டும் அறிமுகப்படுத்துவதாகவும் பிரதமர் நஃப்தலி பென்னெட் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.aljazeera.com/amp/news/2021/11/28/israel-to-ban-entry-of-all-foreigners-over-omicron&ved=2ahUKEwjkxaez-br0AhWDT2wGHWdQAYIQFnoECAUQAQ&usg=AOvVaw1CM-g_QBsHSIVJEFTpsypO&ampcf=1

Popular

More like this
Related

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...