கடைசிப் பந்தில் பவுண்டரி அடித்து வங்கதேசத்தை வீழ்த்தி T20 தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான் அணி!

Date:

பங்களாதேசத்திற்கு எதிரான மூன்று டி 20 ஆட்டத்திலும் வெற்றி பெற்று பாகிஸ்தான் அணி தொடரை கைப்பற்றியது.பங்களாதேஷுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் மூன்று இருபதுக்கு 20 மற்றும் 2 டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

முதலாவது டி 20 ஆட்டம் கடந்த வெள்ளிக்கிழமை ( 19) இடம்பெற்றது . இதில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இரண்டாவது டி 20 ஆட்டம் கடந்த சனிக்கிழமை (20) நடைபெற்றது இதில் 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றிருந்தது.

இன்றைய தினம் ( 22) மூன்றாவதும் இறுதியுமான ஆட்டம் டாக்காவில் இடம்பெற்றது.இதில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 124 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டத்தில் ஆரம்ப வீரரான முஹம்மத் நயீம் 47 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் முகம்மத் வசீம் , உஸ்மான் காதீர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.

125 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 127 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கை அடைந்தது.இதன் மூலம் 3-0 என்ற கணக்கில் தொடரை பாகிஸ்தான் அணி வசமானது.

பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தில் கைதர் அலி 45(38), முஹம்மத் ரிஸ்வான் 40( 43) ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தனர்.கடைசி ஓவரில் வெற்றி பெற 8 ஓட்டங்கள் தேவைப்பட்ட போது மஹ்முதுல்லாஹ் சிறப்பாக பந்து வீசி முதல் 3 பந்துகளுக்கு ஓட்டங்கள் எதுவும் கொடுக்காமல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார்.கடைசிப் பந்தில் 2 ஓட்டங்கள் பெற வேண்டி ஏற்பட்டது இந்நிலையில் நவாஸினால் பெறப்பட்ட 4 ஓட்டத்துடன் போட்டி பாகிஸ்தான் வசமானது.போட்டி நாயகனாக கைதர் அலி மற்றும் தொடர் நாயகனாக முஹம்மத் ரிஸ்வான் தெரிவானமை குறிப்பிடத்தக்கது.

 

 

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...