கிண்ணியா குறிஞ்சாக்கணி மிதப்பு பாலம் கவிழ்ந்ததில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.கடந்த 23 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஆறு வயது சிறுமியொருவரே இன்று காலை (28) உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய குறிஞ்சாக்கணி மிதப்பு பாலம் கவிழ்ந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.