பல்கலைக்கழக மாணவர் பதிவு டிசம்பர் மாதம் முதல்!

Date:

2020 ஆம் ஆண்டின் கல்வியாண்டுக்கான வெட்டுப்புள்ளிகளுக்கு அமைவாக பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்ற மாணவர்கள் பதிவு செய்யும் நடவடிக்கைகள் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழகங்களுக்கான வெட்டுப் புள்ளிகளை வெளியிடும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள தாகவும் , இதற்கமைய ஒவ்வொரு மாணவரும் தான் தெரிவாகியுள்ள பல்கலைக்கழகம் மற்றும் பாடநெறிகள் தொடர்பில் அறிந்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யும் நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டியுள்ளதாக பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டார்.இதேவேளை பல்வேறு பீடங்களையும் டிசம்பர் மாதம் மற்றும் ஜனவரி மாதத்தின் முற்பகுதியில் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.இம் முறை பல்கலைக்கழகத்திற்கு 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...