மூன்றாவது நாளாகவும் தொடரும் மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் தொழிற்சங்க போராட்டம்!

Date:

கெரவலப்பிட்டி யுகதனவி மின்னுற்பத்தி நிலையத்தின் 40 % பங்குகள் அமெரிக்கா நிறுவனத்துக்கு வழங்கப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் முன்னெடுத்துள்ள ‘ சட்டப்படி வேலை செய்யும்” தொழிற்சங்க நடவடிக்கை மூன்றாவது நாளாகவும் (27) தொடர்ந்து வருகிறது.

தொழிற்சங்க நடவடிக்கை கடுமையாக்கப்பட்டு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக குறித்த சங்கத்தின் தலைவர் செளமய குமாரவடு தெரிவித்துள்ளார்.இதன் காரணமாக எதிர்வரும் நாட்களில் ஏற்படும் மின்சார துண்டிப்புக்களை வழமைக்கு கொண்டு வர முடியாத நிலை உருவாகுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

மின்னிலைய ஒப்பந்தத்துக்கு எதிரான மனுவை எதிர்வரும் 29 ஆம் திகதி பிரதம நீதியரசர் தலைமையிலான 5 வர் அடங்கிய குழு முன்னிலையில் விசாரிக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.குறித்த மனு நேற்றைய தினம் (26) மூவரடங்கிய குழு முன்னிலையில் அழைக்கப்பட்ட போது குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த மனு எதிர்வரும் திங்கட்கிழமை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய , நீதியரசர்களான புவனேக அலுவிஹாரே , பிரியன்த ஜயவர்தன , விஜித் மலல்கொட மற்றும் எல்.ரி.பி தெஹிதெனிய ஆகியோர் கொண்ட குழு முன்னிலையில் ஆரயப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...