நாட்டில் எந்தவொரு பகுதிக்கும் இன்றைய தினம் (05) மின்சாரம் துண்டிக்கப்படமாட்டாது என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் எம்.ஆர் ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.
நாளை (06) மற்றும் நாளை மறுதினங்களில் சில பகுதிகளில் மின் தடை ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதாகவும்,எவ்வாறாயினும், எதிர்வரும் புதன்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் மின்சார விநியோகம் வழமையான முறையில் இடம்பெறும் என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் எம்.ஆர் ரணதுங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.