நாட்டின் பல உணவகங்களுக்கு அபராதம்- நீதிமன்றம் உத்தரவு!

Date:

மட்டக்களப்பு நகர் பகுதியில் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற தவறிய பிரபலமான மூன்று உணவகங்கள் உட்பட ஏழு உணவகங்களை தலா பத்தாயிரம் ரூபா வீதம் எழுபதாயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்த வேண்டுமென மட்டக்களப்பு நீதிமன்ற நீதிவான் ஏ.சி.எம் ரிஸ்வான் இன்று (02) வியாழக்கிழமை உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளார்.

மட்டக்களப்பு சுகாதார அதிகாரி பிரிவிலுள்ள வெட்டுக்காடு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நகர் பகுதியிலுள்ள உணவகங்களை இன்று தீடீர் முற்றுகையிட்ட போது சுகாதார நடைமுறைகளை ஒழுங்காக பின்பற்றாது செயல்பட்ட பிரபல்யமான 3 உணவகங்கள் உட்பட 7 உணவகங்களுக்கு எதிராக உணவு சட்டத்தின் கீழ் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை வழக்கு தாக்குதல் செய்தனர்.

இதனையடுத்து வழக்கை விசாரணைக்கு எடுத்த போது தலா ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபா வீதம் எழுபதாயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறு நீதிவான் ஏ.சி.எம் ரிஸ்வான் உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளார்.

Popular

More like this
Related

நெதன்யாகுவுக்கு குறி வைத்த ஈரான்.. இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஈரான் தகவல்...

அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது: ஈரான் திட்டவட்டம்

போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்காவுடன் எந்தவிதமான சமரசப் பேச்சுவார்த்தையும் நடத்தப்போவதில்லை என...

அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுச் சதிக்கு எதிராக தமிழகத்தில் வெடித்த எதிர்ப்பு: அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஓரணியில்!

இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலால் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி...

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...