பிலிப்பைன்ஸில் ராய் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீனா உதவி!

Date:

பிலிப்பைன்ஸில் ராய் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் சீனா சுமார் 7 கோடியே 54 லட்சம் ரூபாய் நிதியும், 4 ஆயிரத்து 725 டன் அரிசியையும் வழங்கியுள்ளது.

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான நேரத்தில் சீனா உதவியிருப்பதாக கூறி பிலிப்பைன்ஸ் தேசிய வள மற்றும் சரக்கு மேலாண்மை அமைப்பின் இயக்குனர் இம்மானுவேல் ப்ரிவாடோ அந் நாட்டு அரசுக்கு நன்றி தெரிவித்தார்.

பிலிப்பைன்சை சூறையாடிய ராய் புயலால் சுமார் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, நிவாரண பணிகளை விரைவுப்படுத்துவதற்காக நாட்டின் பல பகுதிகளிலும் நேற்றிரவு (22) பேரிடர் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...