பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு அம்பாறையில் நடாத்தப்பட்ட மாவட்ட நிகழ்வு!

Date:

கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்படும் SGBV திட்டத்தின் கீழ் பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட மாவட்ட நிகழ்வு நேற்று முன்தினம் [30] அம்பாறை மொன்டி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இம்முறை ‘Orange the World – பெண்களுக்கு எதிரான வன்முறையை இப்போதே ஒழிக்கவும்’ எனும் தொனிப்பொருளில்,

கப்சோ நிறுவனத்தின் பணிப்பாளர் காமில் இம்டாட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல். பண்டாரனாகே கலந்து சிறப்பித்தார்.

மேலும் அதிதிகள் வரிசையில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் ஜெகதீசன், வைத்தியர் சமீர, மாவட்ட சிறுவர் பெண்கள் பிரிவின் பிரதம பொலிஸ் பரிசோதகர் திருமதி கமகே, மாவட்ட மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. சுரேகா எதிரிசிங்க, ஆசிய நிலையத்தின் பிரதிநிதி ஜவாஹிர், அம்பாறை பிரிவு ஒன்றின் பொலிஸ் அத்தியட்சகர் ஹேரத், அம்பாறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பண்டார ஆகியோர் கலந்து கொண்டனர் . இந் நிகழ்வில் மாவட்டத்தில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமான முன்மொழிவுகளை திணைக்களங்களின் பிரதிநிதிகள் முன் வைத்தனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட அரசாங்க அதிபரால் விளக்கமளிக்கப்பட்டது.

மேலும் இந் நிகழ்வை சிறப்பிக்க அம்பாறை மாவட்டத்தில் பணியாற்றும் சகல பொலிஸ் நிலையங்களினதும் சிறுவர், மகளிர் பிரிவு பொறுப்பதிகாரிகள், சகல பிரதேச செயலகங்களிலும் பணியாற்றும் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், உளவள உத்தியோகத்தர்கள், சுகாதாரப் பிரிவு உத்தியோகத்தர்கள், ஏனைய அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், கப்சோ நிறுவன உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

(எம்.பி.எம்.றின்ஸான்)

 

Popular

More like this
Related

எங்களுக்குத் தேவையற்ற கூடுதல் பாலின அடையாளங்கள் தேவையில்லை. ஹங்கேரி பிரதமர்.

பாலின அடையாளம் மற்றும் பாரம்பரிய குடும்ப விழுமியங்கள் குறித்த விவாதத்தில், ஹங்கேரி...

பல மாவட்டங்களுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என இயற்கை...

க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை மேலதிக வகுப்புகளுக்கு தடை

2025ம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 17ம் திகதி...

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தால் 1.9 பில்லியன் ரூபா ஒதுக்கீடு!

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி...