போதைப் பொருள் அறிக்கை தொடர்பில் நீதி அமைச்சர் அலி சப்ரியின் அதிரடி தீர்மானம்!

Date:

போதைப்பொருள் தொடர்பான அறிக்கைகளைப் பெறுவதற்கான கால எல்லை இரண்டு வாரங்களாக குறைக்கப்படும் என நீதி அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.

பகுப்பாய்வாளர் திணைக்களத்திடமிருந்து அறிக்கைகளைப் பெறுவதற்கு சுமார் எட்டு மாதங்களானதாகவும் அது ஒரு மாதமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அத்தகைய அறிக்கைகளை உடனடியாக பெற்றுக் கொள்வதன் மூலம், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைக்காக பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் நாளை அங்குரார்ப்பணம்.

நாட்டை மீள கட்டியெழுப்பும் Rebuilding Sri Lank வேலைத்திட்டத்தை செயற்திறனுடன் முன்னெடுக்கும்...

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.

வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க...

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...