மடகாஸ்கரில் சரக்குக் கப்பல் கவிழ்ந்து விழுந்து விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 64 ஆக உயர்வு!

Date:

கிழக்கு ஆப்பிரிக்காவின் மடகாஸ்கர் தீவில் சட்டவிரோதமாக பயணிகளை ஏற்றிச் சென்ற சரக்கு கப்பல் கவிழ்ந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளது.

மடகாஸ்கர் வட கிழக்கு கடற்கரை அருகே, சுமார் 138 பயணிகளை ஏற்றிச் சென்ற கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கப்பலின் என்ஜின் பகுதியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கப்பல் கவிழ்ந்திருக்கலாம் என துறைமுக அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், இன்று காலை செயின்ட்- மேரி தீவுகளுக்கு அருகில் இருந்த பயணிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் உயிரிழப்புகள் 64 ஆக உயர்ந்துள்ளதாகவும் காணாமல் போன 24 பயணிகளைத் தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கிடையில், 50 பயணிகள் உயிருடன் மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...