ஸம் ஸம் நிறுவனத்தின் அனுசரணையில் சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை மேம்படுத்துவதற்கான விசேட வேலைத்திட்டம்!

Date:

சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை மேம்மடுத்துவதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை மத்திய மாகாண கல்வித் திணைக்களம் முன்னெடுத்துள்ளது.

ELAP (Emergency Learning Assistance programme) எனும் இத் திட்டத்தின் முதலாவது கட்டமாக 21 நிலையங்களில் 1050 மாணவர்களுக்குபரிட்சையில் சித்தியடைய விஷேட பயிற்சி வழங்கும் இந்த திட்டத்திற்கு ஸம் ஸம் நிறுவனம் அனுசரணை வழங்குகிறது.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த 25 ஆம் திகதி வியாழக்கிழமை மத்திய மாகாணக் கல்வித் திணைக்களத்தில் கைச்சாத்திடப்பட்டது. இந் நிகழ்வில் மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் திரு. அமரசிறி பியதாச,மேலதிக கல்விப் பணிப்பாளர்கள், ஸம் ஸம் நிறுவனத்தின் தலைவர் முப்தி.யூசுப் ஹனிபா மற்றும் ஸம் ஸம் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

2013 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஸம் ஸம் நிறுவனமானது இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் கல்வி, சமூக நல்லிணக்கம், சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு, வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய பகுதிகளில் “மதங்களைக் கடந்த மனிதநேயம்” என்ற கருப்பொருளின் கீழ் இயங்கும் பதிவு செய்யப்பட்ட இலங்கை சமூக சேவைகள் அமைப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

அரச ஊழியர்களுக்கு சொத்து விபரங்களை வழங்க ஒருவார காலவகாசம்

2023 ஆண்டின் இலக்கம் 9 என்ற ஊழல் எதிர்ப்பு சட்டத்திற்கமைய அரச...

மௌலானா சையத் சல்மான் ஹுசைனி நத்வியின் மறைவுக்கு ஸ்ரீலங்கா ஜமாஅத்தே இஸ்லாமி இரங்கல்!

இந்தியாவைச் சேர்ந்த  புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவரான மௌலானா சையத் சல்மான்...

கொழும்பு ஹமீத் அல் ஹுஸைனி கல்லூரி வரலாற்றில் முக்கிய மைல்கல்: 9 மாடிக் கட்டடத் தொகுதிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது!

இலங்கையின் முதலாவது முஸ்லிம் ஆண்கள் பாடசாலையாக 1884 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட...

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் மஜீட் காலமானார்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், ஓய்வுபெற்ற சிரேஷ்ட...