அநுராதபுரத்தில் டெங்கு நோய் தீவிரம்!

Date:

அநுராதபுரத்தில் டெங்கு நோய் தீவிரமாக பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாக மாவட்ட தொற்று நோய் பிரிவின் விசேட வைத்தியர் தேஜன சோமதிலக்க தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் இறுதி வாரத்தில் மாத்திரம் பத்து டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் , அநுராதபுரம் புதிய பஸ் தரிப்பு நிலையம் அமைந்துள்ள பகுதியில் நேற்று முன்தினம் (01) மேலும் மூன்று டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்று நோய் பிரிவின் விசேட வைத்தியர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.இதனையடுத்து நகரின் புதிய பஸ்தரிப்பு நிலையம் உள்ளிட்ட பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை நடவடிக்கைகளின் போது டெங்கு நுளம்பு உருவாகக் கூடிய குடம்பிகள் அதிகமான இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

மழையுடனான காலநிலை காணப்படுவதால் இந் நிலைமை ஏற்பட்டுள்ளதுடன் , எதிர்வரும் ஜனவரி மாதத்தில் இந்த நிலைமை மாவட்டத்தின் ஏனைய இடங்களுக்கு பரவக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளதாக அநுராதபுரம் மாவட்ட தொற்று நோய் பிரிவின் விசேட வைத்தியர் தேஜன சோமதிலக்க தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இந்த  எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி...

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம்; இன்றுமுதல் இலகுவான நடைமுறை

ஒரு முன்னோடித் திட்டமாக புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி...

இலங்கையில் பார்வையின்மையை எதிர்த்துப் போராடுவதற்கான சவூதியின் ‘நூர் தன்னார்வத் திட்டம்’ எம்பிலிப்பிட்டியாவில்!

சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால சிறப்பான உறவுகளை அடிப்பையாகக் கொண்டும்...

கலாசாரங்களை சீரழிக்கும் LGBTQ சுற்றுலா திட்டங்களை அனுமதிக்க வேண்டாம்:கொழும்பு பேராயர் வேண்டுகோள்

நாட்டில் LGBTQ (ஓரினச்சேர்க்கை) சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளில் அதிருப்தி தெரிவித்துள்ள...