அநுராதபுரத்தில் டெங்கு நோய் தீவிரம்!

Date:

அநுராதபுரத்தில் டெங்கு நோய் தீவிரமாக பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாக மாவட்ட தொற்று நோய் பிரிவின் விசேட வைத்தியர் தேஜன சோமதிலக்க தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் இறுதி வாரத்தில் மாத்திரம் பத்து டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் , அநுராதபுரம் புதிய பஸ் தரிப்பு நிலையம் அமைந்துள்ள பகுதியில் நேற்று முன்தினம் (01) மேலும் மூன்று டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்று நோய் பிரிவின் விசேட வைத்தியர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.இதனையடுத்து நகரின் புதிய பஸ்தரிப்பு நிலையம் உள்ளிட்ட பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை நடவடிக்கைகளின் போது டெங்கு நுளம்பு உருவாகக் கூடிய குடம்பிகள் அதிகமான இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

மழையுடனான காலநிலை காணப்படுவதால் இந் நிலைமை ஏற்பட்டுள்ளதுடன் , எதிர்வரும் ஜனவரி மாதத்தில் இந்த நிலைமை மாவட்டத்தின் ஏனைய இடங்களுக்கு பரவக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளதாக அநுராதபுரம் மாவட்ட தொற்று நோய் பிரிவின் விசேட வைத்தியர் தேஜன சோமதிலக்க தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...