அரசுக்கு எதிராக போராட்டத்தில் இன்று களமிறங்கவுள்ள மக்கள் விடுதலை முன்னணி!

Date:

மக்கள் விடுதலை முன்னணி இன்று (24) நாட்டின் பிரதான நகரங்களில் போராட்டங்களை நடத்தவுள்ளது.நாட்டில் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு, அத்தியாவசிய பொருட்களின் உயர்வு மற்றும் உரப் பிரச்சினை என்பவற்றுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

பாணந்துறை, அக்குரஸ்ஸ, பதுளை, குருநாகல், சிலாபம், ரிக்விலகஸ்கட , பூண்டுலோயா, கதுரு ஓயா மற்றும் திருகோணமலை முதலான பகுதிகளில் இப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.

தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்க பிரதிநிதிகளும் இப் போராட்டத்தில் இணைந்து கொள்ளவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

தேசிய பாதுகாப்பை மீள் உறுதி செய்தலில் நீதித்துறையின் வகிபாகம்.

நேற்றைய தொடர்ச்சி... பகுதி-02 குடும்பக் கட்டமைப்புகள் பல தலைமுறைகளைக் கொண்டதாகவும் சமூக அடிப்படையிலானதாகவும் இருந்தன. மத...

புனித மக்கா மாநகரில் இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் மகளின் திருமண ஒப்பந்தம் (நிக்காஹ்)!!

சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் ஓமர் லெப்பே அமீர் அஜ்வத் அவர்களின்...

அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 116 மேலதிக வாக்குகளால் தோல்வி!

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிராக...