ஆஸ்திரியாவின் புதிய பிரதமர் பதவியேற்ற இரண்டு மாதங்களில் இராஜினாமா!

Date:

ஊழல் குற்றச்சாட்டுகளை தொடா்ந்து, ஆஸ்திரியாவின் புதிய பிரதமா் அலெக்சாண்டா் ஷாலென்பொ்க் பதவியேற்ற இரண்டு மாதங்களில் தனது பதவியை நேற்று (02) வியாழக்கிழமை ராஜிநாமா செய்துள்ளார்.

முன்னாள் பிரதமா் செபாஸ்டியன் கா்ஸ் ராஜிநாமாவைத் தொடா்ந்து, கடந்த அக்டோபா் மாதம் புதிய அதிபராக அலெக்சாண்டா் ஷாலென்பொ்க் பதவியேற்றாா். தற்போது, இவா் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.

அவர் கருத்து தெரிவிக்கும் போது,

ஆஸ்திரியாவில் அதிக வாக்குகளைப் பெற்ற அரசாங்கத்தின் தலைவா் மற்றும் கட்சியின் தலைவா் ஆகிய இரண்டு பதவிகளும் விரைவில் ஒரு கைக்குள் இணைக்கப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்’ என்றாா்.

ஆஸ்திரியா மக்கள் கட்சித் தலைவராக இருக்கும் முன்னாள் பிரதமா் செபாஸ்டியன் கா்ஸ், தனது குடும்பத்தினருடன் கூடுதல் நேரத்தை செலவிடும் வகையில் அரசியலை விட்டே விலகுவதாக அறிவித்திருந்தார்.

இதனையடுத்து, நாட்டின் உள்நாட்டு அமைச்சராக இருக்கும் காா்ல் நெஹாமா், ஆஸ்திரியா மக்கள் கட்சியின் தலைவராகவும், பிரதமா் பொறுப்பையும் ஏற்க வாய்ப்புள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...