இலங்கை நபரின் கொலை சம்பவம் தொடர்பில் பாகிஸ்தான் வெட்கப்பட வேண்டும் – இம்ரான் கான்!

Date:

பாகிஸ்தானின் சியால்கோட் பகுதியில் இலங்கை நபர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் கூடிய முக்கிய சந்தேக நபர்கள் உள்ளிட்ட 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகமான அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.

சியால்கோட் நகரில் நேற்று (03) இலங்கையர் ஒருவர் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு , எரியூட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் கருத்து தெரிவித்துள்ளார்.அதாவது இந்த சம்பவம் தொடர்பில் பாகிஸ்தான் வெட்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதுடன் , அதனுடன் தொடர்புடைய சகலருக்கும் உரிய தண்டனை வழங்கப்படும் என தாம் உறுதியளிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.குறித்த விசாரணைகளில் நேரடியாக தொடர்பு கொண்டிருப்பதாகவும், விசாரணைகளில் எந்த தவறும் இடம்பெறாது எனவும் பிரதமர் இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் பாகிஸ்தான் நாட்டின் அரசாங்கம் முழுமையான விசாரணையை மேற்கொள்ளும் என்று எதிர்பார்ப்பதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.சியல்கோட் நகரில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் முகாமையாளராக பணியாற்றிய இலங்கையர், அந்த தொழிற்சாலையின் தொழிலாளர்களால் தாக்கி கொலை செய்யப்பட்டு ,அவரது உடல் எரியூட்டப்பட்டது.இது தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் ‌வெளியாகியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக உறுதிப்பாடுகளை பாகிஸ்தானில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரம் ஊடாக மேற்கொள்ள முயற்சிப்பதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.இது தொடர்பில் பாகிஸ்தான் அரசு உரிய விசாரணைகளை மேற்கொள்ளும் என்று குறித்த அமைச்சு தெரிவித்துள்ளது.

 

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...