எரிவாயு பிரச்சினைகள் தொடர்பான முறைப்பாடுகளை அறிவிக்க இரண்டு விசேட தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளது.எரிவாயு தொடர்பான பிரச்சினைகளை ஆராய்ந்து , தீர்வுகளை முன்வைப்பதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட 8 பேரடங்கிய குழுவின் தலைவர் பேராசிரியர் சாந்த வல்பெலகே இதனைத் தெரிவித்துள்ளார்.
011-5811927/011-5811929 ஆகிய இரண்டு தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொண்டு எரிவாயு தொடர்பான பிரச்சினைகளை அறிவிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.இந்த ஆண்டின் இதுவரையில் 131 வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக குறித்த அறிக்கை தெரிவித்துள்ளது.