சாய்ந்தமருது அல் – ஹிலால் வித்தியாலயத்தில் இடம்பெற்ற கௌரவிக்கும் நிகழ்வு. 

Date:

சாய்ந்தமருது அல் – ஹிலால் வித்தியாலயத்தில் ஓய்வுபெற்ற அதிபர் ஐ.எல்‌.ஏ.மஜீதின் ஓய்வு நிலையைப் பாராட்டி, கௌரவிக்கும் நிகழ்வு  மற்றும் வித்தியாலயத்திலிருந்து பிரியாவிடை பெற்றுச் சென்ற முன்னாள் அதிபர் எம்.எஸ்.எம். பைசாலை கௌரவிக்கும் நிகழ்வும் மிகச் சிறப்பான முறையில் பாடசாலை ஆராதனை மண்டபத்தில் இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் யு.எல். நஸார் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், பிரதம அதிதியாக கல்முனை கல்வி மாவட்ட பொறியியலாளர் ஏ.எம். சாகிர் கலந்து கொண்டார். கௌரவ அதிதியாக கல்முனை கல்வி வலய கணக்காளர் ஹபிபுல்லா, விசேட அதிதியாக முன்னாள் அதிபர் ஐ.எல்.ஏ. மஜீதின் புதல்வர் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அஸ்லம் சஜா மற்றும் வலயக் கல்வி அலுவலக ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலை நிறைவேற்று குழு உறுப்பினர்கள், பிரதி அதிபர் றிப்கா அன்ஸார், உதவி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள்,  ஆசிரியைகள் உட்பட மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...