சில நாட்களுக்கு மின் துண்டிப்பு தொடரும்- இலங்கை மின்சார சபை!

Date:

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மின் பிறப்பாக்கியில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக நாளொன்றுக்கு 45 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்படுகின்றது.குறித்த மின் பிறப்பாக்கி புனரமைக்கப்படும் வரை மேலும் சில நாட்களுக்கு மின் துண்டிப்பு ஏற்படும் என மின்சார அமைச்சு தெரிவித்துள்ளது.

தினமும் மாலை 6 மணி முதல் 9.30 மணிவரை இந்த மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.மின் பிறப்பாக்கியில் தொடர்ச்சியாக எண்ணெய் கசிவு ஏற்படுவதாகவும் , மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால் தேசிய மின் விநியோக கட்டமைப்பில் சமநிலையை பேண முடியாததால் மின் தடை ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் இக் கோளாறை சீர் செய்வதற்கு எத்தனை நாட்கள் செல்லும் என்பதை உறுதியாக கூற முடியாது என இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் செளமய குமார மானவடு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...