சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய பொது வெளியில் இசை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்குமாறு சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளை, காவல்துறை மா அதிபர் கேட்டுள்ளார்.அதற்கமைய, திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் மாலை 6 மணி முதல் 10 மணி வரை இசை நிகழ்ச்சிகளை நடத்த முடியும் என அனுமதி அளித்துள்ளது.
அத்துடன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மாலை 6 மணி முதல் அதிகாலை ஒரு மணி வரை இசை நிகழ்ச்சிகளை முன்னெடுக்க முடியும்.ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6 மணி முதல் அதிகாலை 12.30 மணி வரை இசை நிகழ்ச்சிகளை நடத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.