மட்டக்களப்பு நகர் பகுதியில் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற தவறிய பிரபலமான மூன்று உணவகங்கள் உட்பட ஏழு உணவகங்களை தலா பத்தாயிரம் ரூபா வீதம் எழுபதாயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்த வேண்டுமென மட்டக்களப்பு நீதிமன்ற நீதிவான் ஏ.சி.எம் ரிஸ்வான் இன்று (02) வியாழக்கிழமை உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளார்.
மட்டக்களப்பு சுகாதார அதிகாரி பிரிவிலுள்ள வெட்டுக்காடு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நகர் பகுதியிலுள்ள உணவகங்களை இன்று தீடீர் முற்றுகையிட்ட போது சுகாதார நடைமுறைகளை ஒழுங்காக பின்பற்றாது செயல்பட்ட பிரபல்யமான 3 உணவகங்கள் உட்பட 7 உணவகங்களுக்கு எதிராக உணவு சட்டத்தின் கீழ் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை வழக்கு தாக்குதல் செய்தனர்.
இதனையடுத்து வழக்கை விசாரணைக்கு எடுத்த போது தலா ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபா வீதம் எழுபதாயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறு நீதிவான் ஏ.சி.எம் ரிஸ்வான் உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளார்.