நுவரெலியாவில் இன்று கடும் பனிப்பொழிவு!

Date:

நுவரெலியா மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று (25) காலை கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நுவரெலியாவில் கிட்டத்தட்ட ஒவ்வொரு வருடமும் கிறிஸ்மஸ் காலத்தில் பூக்கள் பூத்துக் காணப்படுவதோடு, பனிப்பொழிவும் அதிகமாகவே காணப்படும். மேலும், நுவரெலியா நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் இவ்வாறான நிலைமையே காணப்படும் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

நுவரெலியாவில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவி வருவதாகவும், வெப்பநிலை வெகுவாக குறைந்துள்ளதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

நுவரெலியாவில் பெய்யும் பனிப்பொழிவு காரணமாக மலையக மரக்கறிச் செய்கை மற்றும் தேயிலை பயிர்ச்செய்கை பெரிதும் பாதிக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...