பன்னூலாசிரியரும்,விரிவுரையாளருமான மௌலானா முஹம்மத் யூசுப் இஸ்லாஹி மறைந்தார்!

Date:

இஸ்லாமிய அழைப்பாளரும், எழுத்தாளரும், பேச்சாளரும், பன்னூலாசிரியரும், குர்ஆன் விரிவுரையாளருமான மௌலானா முஹம்மத் யூசுப் இஸ்லாஹி மரணம் அடைந்தார்.

இந்தியாவின் பிரபல இஸ்லாமிய அறிஞரான மவ்லானா யூசுப் ஜிக்ரா என்ற பத்திரிகையை நடாத்தி வந்தார். மகளிருக்கான சிறப்பான இஸ்லாமியக் கல்வி நிறுவனமாக முத்திரை பதித்து சிறப்பாகச் செயல்பட்டு வருகின்ற ஜாமியத்துஸ் ஸாலிஹாத் (ராம்பூர்) என்கிற பெண்கள் மத்ரஸாவின் முதல்வராகவும் இயங்கி வந்தார். குர்ஆனை முழுமையாக மனனம் செய்தவரான அவர், மௌலானா அமீன் அஹ்ஸன் இஸ்லாஹி அவர்களிடம் பாடம் பயின்றவர். ஏராளமான நூல்களை எழுதி இருக்கின்றார்.

ஆதாபே ஜிந்தகி என்கிற இவரது நூல் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றது. மணமக்களுக்குத் தரப்படுகின்ற அழகான நூலாக இந்தியத் துணைக்கண்டமே கொண்டாடுகின்ற நூலாக இது பிரபல்யம் பெற்றது. வாழ்க்கைக் கலை என்கிற பெயரில் சென்னை இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் (IFT)இதனை வெளியிட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன பதியில் நுழைவிப்பானாக.

Popular

More like this
Related

திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை: காலம் காலமாக அரசாங்கம் மாறினாலும் பௌத்த மக்களின் உரிமை மாறாது: ஞானசார தேரர்.

திருகோணமலையில் வலுத்துள்ள புத்தர் சிலை சர்ச்சைக்கு மத்தியில் கலகொட அத்தே ஞானசார...

புதிய வவுச்சர் திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கான காலணிகள்!

250க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு, பாதணிகளை பெற்றுக்கொள்வதற்காக கல்வி அமைச்சினால்...

கிராமிய பாலங்கள் நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

கிராமிய பாலங்களை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அரச அபிவிருத்தி மற்றும் நிர்மாணத்...

ஷேக் ஹசீனா மரண தண்டனை தீர்ப்புக்கு எதிரான வன்முறை சம்பவங்களில் இருவர் பலி

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மரண தண்டனை தீர்ப்புக்கு எதிரான...