அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு டிசம்பர் மாதம் வழங்கப்படவுள்ள விடுமுறையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
டிசம்பர் 23 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையிலிருந்த தினத்தை எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் ஜனவரி 02 ஆம் திகதி வரை குறித்த விடுமுறையை நீடிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.அதன்படி ஜனவரி 3 ஆம் திகதி பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.