பிரியந்த குமாரவின் இறுதிக் கிரியை நிறைவு!

Date:

பாகிஸ்தானின் சியல்கோட்டில் தீவிரவாதக் குழுவினால் தாக்குதலுக்கு உள்ளாகி கடந்த வெள்ளிக்கிழமை (03) உயிரிழந்த பிரியந்த குமார தியவதன தனது மனைவி, இரண்டு பிள்ளைகள் மற்றும் உறவினர்களிடம் பிரியாவிடை பெற்றுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை பாகிஸ்தானில் பிரியந்த குமார தீவிரவாதக் கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.பிரியந்தவிற்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக ஏராளமான இராஜதந்திரிகள், அரசியல்வாதிகள் மற்றும் நண்பர்கள் அவரது இல்லத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.அவரது திடீர் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர், கர்தினால் மல்கம் ரஞ்சித் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சமய வழிபாடுகளுக்குப் பிறகு அஞ்சலி செலுத்தப்பட்டது.தொடர்ந்து பிரியந்தவின் சடலம் அவரது நண்பர்களால் கணேமுல்ல பொல்ஹேன மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்பட்டது.

Popular

More like this
Related

இராஜதந்திர நியமனங்களில் ஜித்தா ஏன் ஒரு விதிவிலக்காகிறது ?

ஜித்தாவுக்கான கொன்சல் ஜெனரல் நியமனம் தொடர்பில் முஸ்லிம் சமூகத்தில் பெரும் அதிருப்தி...

பாடசாலை மாணவர்களுக்கு 6,000 ரூபாய் உதவித்தொகை: வங்கிக் கணக்குகளில் வைப்பீடு

பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான 6,000 ரூபாய் உதவித்தொகை...

உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பகுதிக்கான திகதி அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பகுதி எதிர்வரும்...