மியான்மர் தலைவர் ஆங்சான் சூகிக்கு நான்கு ஆண்டு சிறை!

Date:

மியான்மர் அரசின் ஆலோசகராக இருந்த ஆங்சான் சூகிக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந் நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் மியான்மர் ராணுவம் அந் நாட்டு அரசை கவிழ்த்துவிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அதை அடுத்து ஆங் சான் சூகி, அதிபர் வின் மைண்ட் உள்ளிட்டோரை ராணுவம் கைது செய்தது. அப்போது முதல் வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட ஆங் சான் சூகி மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

இந் நிலையில், ராணுவத்திற்கு எதிராக அதிருப்தியை தூண்டியதாகவும், கொரோனா விதிமுறைகளை மீறியதாகவும் ஆங் சான் சூகிக்கு 4ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

பேருந்துக் கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவு இன்று (23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அண்மைய...

உத்தியோகபூர்வமற்ற பொலிஸ் செய்திகளை நம்ப வேண்டாம்: பொலிஸ் ஊடகப் பிரிவு

இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்டதைப் போன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்...

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...