மியான்மர் தலைவர் ஆங்சான் சூகிக்கு நான்கு ஆண்டு சிறை!

Date:

மியான்மர் அரசின் ஆலோசகராக இருந்த ஆங்சான் சூகிக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந் நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் மியான்மர் ராணுவம் அந் நாட்டு அரசை கவிழ்த்துவிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அதை அடுத்து ஆங் சான் சூகி, அதிபர் வின் மைண்ட் உள்ளிட்டோரை ராணுவம் கைது செய்தது. அப்போது முதல் வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட ஆங் சான் சூகி மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

இந் நிலையில், ராணுவத்திற்கு எதிராக அதிருப்தியை தூண்டியதாகவும், கொரோனா விதிமுறைகளை மீறியதாகவும் ஆங் சான் சூகிக்கு 4ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இரு தரப்பு வர்த்தகத்தை 1 பில்லியன் டொலராக விரிவுபடுத்த இலங்கை-வியட்நாம் இணக்கம்!

2030- ஆம் ஆண்டுக்குள் ஆண்டு இருதரப்பு வர்த்தகத்தை ஒரு பில்லியன் டொலராக...

வியட்நாம் ஜனாதிபதிக்கு பாராளுமன்றில் செங்கம்பள வரவேற்பு

இலங்கை வந்துள்ள வியட்நாம் ஜனாதிபதியும், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான...

வியட்நாம் ஜனாதிபதி இலங்கை வருகை: பாராளுமன்றத்தில் விசேட உரை

வியட்நாம் சோசலிச குடியரசின் ஜனாதிபதியும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின்...

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன அவரது வீட்டில் சடலமாக மீட்பு.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) கபில...